Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதனின் சிறப்பு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha's Greatness

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

தசரதனின் சிறப்பு

கோசல நாட்டை ஆண்ட தசரத மன்னன் மன்னுயிர்களை தன்  உயிர் போல் காத்து வந்தான். அவனுடைய நீதி தவறாத ஆட்சியால் ஏழு உலகங்களையும் ஆண்டு வந்தான்.

பாடல்

தாயொக்கும் அன்பின் தவமொக்கும்
நலம் பயப்பின்
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்
கதி உய்க்கும் நீரால்
நோயொககும் என்னின்
மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும் அன்னான்

பொருள்

தாயொக்கும்  அன்பின் = அன்பு செலுத்துவதில் பெற்ற தாயைப் போலிருப்பான்

தவமொக்கும் நலம் பயப்பின்=
எல்லோருக்கும் நன்மைகளைச் செய்வதால் தவத்தைப்  போலிருப்பான்

சேயொக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் =
எல்லோரையும் முன்னால் இருந்து நல்லவழியில் செலுத்துவதால் மகனைப் போலிருப்பான்

நோயொககும் என்னின் மருந்தொக்கும் =
தீமை செய்பவர்களுக்கு நோயைப் போலிருப்பான் எனினும் மருந்தைப் போலவும் இருப்பான்

நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும் =
சூட்சுமமான நூல்களை ஆராயும் போது அறிவைப் போலிருப்பான்

எவர்க்கும் அன்னான் =
எல்லோருக்கும்  தசரத சக்கரவர்த்தி

தாயொக்கும் அன்பின் தவமொக்கும்
நலம் பயப்பின்
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்
கதி உய்க்கும் நீரால்
நோயொககும் என்னின்
மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும் அன்னான்


தொடரும்...


அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

No comments: