Friday, July 3, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | நம்மாழ்வார் துதி | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Nammazhvar Thudhi

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

நம்மாழ்வார் துதி

பாடல்

தருகை நீண்ட
தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன்தன் கதை

திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குறை
கழல் காப்பதே.

பொருள்

தருகை (தரும் செய்கை, கொடை தன்மை, இல்லை என்று வரும் வறியவர்க்கு வாரி வழங்கி செழுமை படுத்துதல்)

நீண்ட (அதிகமான, மற்ற யாரையும் விட சிறந்த)

தயரதன்தான் தரும் (தசரத மன்னனின் தூய தமிழ் பதம் தயரதன்)

அத்தகு மன்னன் தரும் (பிறப்பித்து தரும்)

இரு கை வேழத்து (இரண்டு கைகள் உடைய யானையை போலே)

இராகவன் தன் கதை (அவ்வாறாக பட்ட இராகவன் என்ற இராம பிரான் அவர்களின் கதை)

திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட  (வேலை: கடல்; தரை: பூமி, மிசை: சூழ்ந்து; கடல் சூழ்ந்த இந்த உலகில் செப்பிட: உரைத்திட)

குருகை நாதன் (திருக்குருகூரில் தோன்றிய தலைவராகிய நம்மாழ்வார்)

குறை கழல் காப்பதே (ஒலிக்கும்  சிலம்பு அணியபட்டிருக்கும்  திருவடி காக்க வேண்டும்!)

தருகை நீண்ட 
தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து
இராகவன்தன் கதை

திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குறை
கழல் காப்பதே

தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

Thursday, July 2, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | காண்டங்களும் படலங்களும் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Retelling of Rama Kathai - Divisions & Parts

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தமிழில் 'இராமாவதாரம்' என்னும் பெயரில் காப்பியமாக்கியவர் கம்பர்.
இதனால் இவர் ஆக்கிய இராமனின் காதை கம்பராமாயணம் (கம்ப இராமாயணம்) என வழங்கப்படுகின்றது.

காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் இந்த நூல் தமிழ் இலக்கியங்களில் தலையாய இடம் பெற்றுள்ளது.

தமிழ்ப் பண்பாட்டை இந்த நூலில் வரும் பல்வேறு மக்கள் மூலமும் காட்சிகள் மூலமும் சித்தரித்து, ஒப்பிட்டு, விளக்கி, வால்மீகி படைத்த கதையின் போக்கை தமிழ்ப்பண்பாட்டு இழையோட கம்பர் இந்தக் காப்பியத்தை உருவாக்கியுள்ளார்.

கம்ப இராமாயணம், பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களாகப் பிரிக்கபட்டுள்ளது.

காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும்.

ஒவ்வொரு காண்டமும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அத்தகு உட்பிரிவுகளுக்குப் படலம் என்று பெயர்.

இந்த ஆறு காண்டங்களில் 123 படலங்களும், 10,000த்திற்கு மேற்பட்ட பாடல்களும் உள்ளன.


பாலகாண்டம்

'பால' என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.


பாயிரம்

1) ஆற்றுப் படலம்
2) நாட்டுப் படலம்
3) நகரப் படலம்
4) அரசியற் படலம்
5) திரு அவதாரப் படலம்
6) கையடைப் படலம்
7) தாடகை வதைப் படலம்
8) வேள்விப் படலம்
9) அகலிகைப் படலம்
10) மிதிலைக் காட்சிப் படலம்
11) கைக்கிளைப் படலம்
12) வரலாற்றுப் படலம்
13) கார்முகப் படலம்
14) எழுச்சிப் படலம்
15) சந்திரசயிலப் படலம்
16) வரைக்காட்சிப் படலம்
17) பூக்கொய் படலம்
18) நீர் விளையாட்டுப் படலம்
19) உண்டாட்டுப் படலம்
20) எதிர்கொள் படலம்
21) உலாவியற் படலம்
22) கோலம்காண் படலம்
23) கடிமணப் படலம்
24) பரசுராமப் படலம்


அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப் படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

25) மந்திரப் படலம் (1)
26) மந்தரை சூழ்ச்சிப் படலம் (2)
27) கைகேயி சூழ்ச்சிப் படலம் (3)
28) நகர் நீங்கு படலம் (4)
29) தைலம் ஆட்டு படலம் (5)
30) கங்கைப் படலம் (6)
31) குகப் படலம் (7)
32) வனம் புகு படலம் (8)
33) சித்திரகூடப் படலம் (9)
34) பள்ளிப்படைப் படலம் (10)
35) ஆறுசெல் படலம் (11)
36) கங்கை காண் படலம் (12)
37) திருவடி சூட்டு படலம் (13)


ஆரணிய காண்டம்

இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.

38) விராதன் வதைப் படலம் (1)
39) சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் (2)
40) அகத்தியப் படலம் (3)
41) சடாயு காண் படலம் (4)
42) சூர்ப்பணகைப் படலம் (5)
43) கரன் வதைப் படலம் (6)
44) சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் (7)
45) மாரீசன் வதைப் படலம் (8)
46) இராவணன் சூழ்ச்சிப் படலம் (9)
47) சடாயு உயிர் நீத்த படலம் (10)
48) அயோமுகிப் படலம் (11)
49) கவந்தன் படலம் (12)
50) சவரி பிறப்பு நீங்கு படலம் (13)


கிட்கிந்தா காண்டம்

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடி அலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்றடைந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

51) பம்பை வாவிப் படலம் (1)
52) அனுமப் படலம் (2)
53) நட்புக் கோட்படலம் (3)
54) மராமரப் படலம் (4)
55) துந்துபிப் படலம் (5)
56) கலன் காண் படலம் (6)
57) வாலி வதைப் படலம் (7)
58) தாரை புலம்புறு படலம் (8)
59) அரசியற் படலம் (9)
60) கார்காலப் படலம் (10)
61) கிட்கிந்தைப் படலம் (11)
62) தானை காண் படலம் (12)
63) நாட விட்ட படலம் (13)
64) பிலம் புக்கு நீங்கு படலம் (14)
65) ஆறு செல் படலம் (15)
66) சம்பாதிப் படலம் (16)
67) மயேந்திரப் படலம் (17)


சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.அதன் பதினான்கு படலங்கள் பின்வருமாறு:

68) கடல் தாவு படலம் (1)
69) ஊர் தேடு படலம் (2)
70) காட்சிப் படலம் (3)
71) உருக் காட்டு படலம் (4)
72) சூடாமணிப் படலம் (5)
73) பொழில் இறுத்த படலம் (6)
74) கிங்கரர் வதைப் படலம் (7)
75) சம்புமாலி வதைப் படலம் (8)
76) பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் (9)
77) அக்ககுமாரன் வதைப் படலம் (10)
78) பாசப் படலம் (11)
79) பிணி வீட்டு படலம் (12)
80) இலங்கை எரியூட்டு படலம் (13)
81) திருவடி தொழுத படலம் (14)


யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

82) கடல் காண் படலம் (1)
83) இராவணன் மந்திரப் படலம் (2)
84) இரணியன் வதைப் படலம் (3)
85) வீடணன் அடைக்கலப் படலம் (4)
86) ஒன்னார் வலிஅறி படலம் (5)
87) கடல் சீறிய படலம் (6)
88) வருணன் அடைக்கலப் படலம் (7)
89) சேது பந்தனப் படலம் (8)
90) ஒற்றுக் கேள்விப் படலம் (9)
91) இலங்கைகாண் படலம் (10)
92) இராவணன் வானரத்தானை காண் படலம் (11)
93) மகுட பங்கப் படலம் (12)
94) அணிவகுப்புப் படலம் (13)
95) அங்கதன் தூதுப் படலம் (14)
96) முதற் போர் புரி படலம் (15)
97) கும்பகருணன் வதைப் படலம் (16)
98) மாயா சனகப் படலம் (17)
99) அதிகாயன் வதைப் படலம் (18)
100) நாகபாசப் படலம் (19)
101) படைத் தலைவர் வதைப் படலம் (20)
102) மகரக்கண்ணன் வதைப் படலம் (21)
103) பிரமாத்திரப் படலம் (22)
104) சீதை களம்காண் படலம் (23)
105) மருத்துமலைப் படலம் (24)
106) களியாட்டுப் படலம் (25)
107) மாயா சீதைப் படலம் (26)
108) நிகும்பலை யாகப் படலம் (27)
109) இந்திரசித்து வதைப் படலம் (28)
110) இராவணன் சோகப் படலம் (29)
111) படைக் காட்சிப் படலம் (30)
112) மூலபல வதைப் படலம் (31)
113) வேல் ஏற்ற படலம் (32)
114) வானரர் களம் காண் படலம் (33)
115) இராவணன் களம் காண் படலம் (34)
116) இராவணன் தேர் ஏறு படலம் (35)
117) இராமன் தேர் ஏறு படலம் (36)
118) இராவணன் வதைப் படலம் (37)
119) மண்டோதரி புலம்புறு படலம் (38)
120) வீடணன் முடி சூட்டு படலம் (39)
121) பிராட்டி திருவடி தொழுத படலம் (40)
122) மீட்சிப் படலம் (41)
123) திருமுடி சூட்டு படலம் (42)


யாருக்கு என்ன எப்போது நேரவேண்டும், கிடைக்கவேண்டும், செய்யவேண்டும் என்று பரம்பொருளுக்கு தீர்க்கமாக  தெரியும்.

தானே பல்வேறு வடிவங்களில் சென்று அவர்களுக்கு ஆசிவழங்கி அதை அடையச் செய்வார். அடுத்த கணம் மறைந்து விடுவார்.

அதைப்போல, கம்பருக்கும் நமக்கும் உண்டான தொடர்பு பள்ளியில் படித்த இராமாயணம் என்றாலும், பின்னர் அங்கங்கே வாழ்வில் பல இடங்களில் அவரைபற்றி பேசுவதை கேட்டும், சில விவரங்களை ஏதேதோ புத்தகங்களில் யாரோ எழுதியதை படித்தும் - கம்பர் மேலும், ஸ்ரீ இராமர் மேலும்,  ஒரு இனம் புரியாத பக்தி ஏற்பட்டது.

அப்படிப்பட்ட ஸ்ரீ இராமரை, கம்பர் காதலொடு பாடும் ஸ்ரீ இராகவனை, பற்றி எழுதும் பாக்கியம் எனக்கு வாழ்வில் கிடைத்தது அந்த பரம்பொருள்  அருளாலே தான்.

'எவருடைய அனுக்கிரக பலம் கொண்டு ஸ்ரீ ஹனுமான் விளையாட்டாகவே கடலை தாண்டி கடந்து, இலங்கையை அடைந்து, ராம பத்தினியை கண்டு,உரையாடி, அரக்கர்களின் அசோக வனத்தை கபளீகரம் செய்து, அக்ஷகுமாரன் முதலியோரை சம்ஹரித்து, பத்து தலையனை கண்டு உரையாடி, அவனது நகரத்திற்கு எரியூட்டி, மீண்டும் கடலை தாண்டி கடந்து, தென்திசை கடல் வரை தன்னுடன் சென்ற வானரர்களுடன் கூடி, எவரை நமஸ்கரித்தாரோ, அந்த ஸ்ரீ ராமச்சந்திரரை தொழுகிறேன்' 🙏

இதில் சில பாடல்களையும் அதன் சொற்சுவை பொருட்சுவை ஆகியவற்றை என்னால் இயன்ற வரை எழுதி பகிர்ந்துள்ளேன்.


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி



The original version of Ramayana was written by Valmiki. 

Tamil Epic Rama-Avataram or Rama-Kathai, written by Kambar is not a verbal translation of the Sanskrit epic by Valmiki, but a retelling of the story of Lord Rama. This is generally referred as Kamba Ramayanam.

Kamba Ramayanam of Kambar is a Tamil epic of about 10,000 + stanzas. 

It is divided into 6 parts (called as kandams), and further divided into 123 sub-parts (called as padalams), and each padalam has many songs & verses.

Tuesday, June 30, 2020

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic


கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கம்ப இராமாயணம் 1100  ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.

இராமாயணம் என்பதின் பொருள் "இராமனின் வழி".

எல்லாம் வல்ல திருமால்,  மானுடனாக அவதரித்து மானுடம் தவறாமல் வாழ்ந்து தெய்வ நிலையை அடைந்ததை விளக்குகிறது இராமாயணம்.

கம்பர் இராமனை "இருக்கை வேழத்து ராகவன்" என்று விளிக்கிறார்.

இராமாயணத்தில் திருமால் இராமனாகவும்,  ஆதிசேஷன் இலக்குவனாகவும்,  சக்கரம் பரதனாகவும்,  சங்கு சத்ருகனாகவும் கூறப்பட்டுள்ளது.

இராமன் "ஆபத்பாந்தவன் , "எளியாம் தன்மை பெற்றவன்".

கம்பர் பன்னிரு ஆழ்வார்களின் அனுபவத்தை... பக்தியை, இராமாயணத்தில் பயன்படுத்துகிறார்.

தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

Thursday, January 9, 2020

Baar baar dekho , DARBAR hazar baar dekho, Ke Dekh ne ki cheez hai hamaari DARBAR , Dekhlo oh oh

*ஆதித்ய அருணாசலம்* ....
பெயரிலேயே நெருப்புகொண்ட ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர்...

போதைப்பொருட்கள் அதிகம் இருக்கும் மும்பை பகுதியை சுத்தப்படுத்த அனுப்ப படுகிறார். அதில் வரும் பிரச்சனைகளை  எதிர் கொள்வதுதான் கதை.

முருகதாஸ் அணு அணுவாக ரசித்து செதுக்கி, நம்மையும்் மெய் மறந்து ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்.

வசனம் ஒவ்வொன்றும் அவ்வளவு பன்ச்...

குறிப்பாக "எம்ஜிஆர் 3 தடவை அடி வாங்கிட்டு அப்புறம் தான் சண்டை போடுவார் .. ஏன் தெரியுமா?"

ஒளிப்பதிவு ரஜினி நடை போல்.. சும்மா கலக்கல் ..

சண்டைக்காட்சி அத்தனையும் அருமையான ஸ்டைல்
இரண்டாவது பகுதியில் திருநங்கைகளின் பாடலுக்கெற்ப அமைக்கப்பெற்ற சண்டைக்காட்சி அடிதூள்..

பின்னணி இசை கிழி  கிழி.. bgm காட்சிகளுக்கும் வசனத்துக்கும் வலு சேர்த்தது ... பாடல்கள் பல வேறு இடங்களில் வந்து எழில் கூட்டுகிறது.

படத்தின் முக்கிய கதாபாத்திரம் வள்ளியாக வரும் நிவேதா தாமஸ்..நம் பக்கத்துவீட்டு பெண் போல் இருக்கிறார்..உருக்கமான காட்சியில் நடிப்பில் உறைய வைக்கிறார். நம்மையறியாமல், அவளை பிடித்து விடுகிறது.

நயனதாரா ... வெங்காய விலை ஏற்றத்தினால் பானிபூரி கடையில் கொஞ்சமாவது வெங்காயம் இருக்கும்..அந்த அளவுக்கு கூட நயந்துக்கு இதில் ஸ்கோப் இல்லை.. பக்கத்து shooting la இருந்து அப்படி
யே வந்த மாதிரி இருக்கு..

படத்தின் முக்கிய கதாபாத்திரம் ரஜினி டீமில் இருக்கும் பெண்போலீஸ்..மிக மிக சிறப்பு..
யோகி பாபு காமெடி கொத்துமல்லி

வில்லனாக வரும் சுனில்ஷெட்டி அதிர வைக்கிறார்.

படம் முழுக்க பயணித்திருப்பது ரஜினி ஸ்டைல், உணர்ச்சி (நிறைய closeup காட்சிகள்), அனல்தெறிக்கும் வசனங்கள்..

சண்டை க்காட்சிகள் சூப்பர்..

ஒளி வெள்ளத்தில் அருணாசலம் ஜொலிக்கிறார்.

நம்பிக்கையிருக்கரவனுக்கு வயசு ஒரு நம்பர் தான்
தலைவர் புரிய வைத்திருக்கிறார்.
படம்..சூப்பர்..


பொங்கலுக்கே வந்த தீபாவளி

அன்புடன்
நா.பிரசன்ன லக்ஷ்மி

Sunday, December 15, 2019

SHOP...SHOP...SHOPPING- MY PASSION

Dear Friends,

I had written this in 2009 and had saved it in Drafts, hoping I would add more later. Then apparently I forgot. Today I realized that this was still lying in my Drafts and publishing now as it is. Thanks  friends for reading. 

This post may be purely a Femina kind of tips, but gents can peep into this to get some good ideas :-)


Shopping is the most interesting thing in everyone's life. But before shopping and after shopping there are many rules and regulations which has to be followed to make this event a successful one.


First and foremost is the preparation of shopping list. Don't imagine yourself as "Idhayam Nallennai Jyothika'' (watch that ad for further details). Devote more time in writing the list. Open all the cupboards and look into the nook and corner of the house before writing the list. Suppose if u have green mug in your toilet you can write red mug in your list... because necessity is not only the important thing in shopping... but there are many things which are enjoyable too!


Next comes the budgets ... First check into your husband's pocket and also into his bank balance.. If nothing much, Don't worry ... Anyways you are going to use his credit card (your husband's add on card) in many places.


For shopping you should not go alone.You should take a friend . Generally there are two kinds of people.

The first category of the people having very good interest in shopping.To buy a''Pavadai nada'' they used to travel all the way from Salem to pondy bazaar. The second category people very allergic to shopping they get tensed even if they see more than two shops in a street.

Your friend should be of first category. Both of you should be very flexible. You may have to bend, stretch, kneel or even crawl in few shopping areas ... So always keep yourself fit.


Choosing the shopping area is a very important. 
Don't choose ''All under one roof'' shop, because there are two disadvantages in this.One is there may be a chance of getting a puncture or even fracture to your purses owing to heavy cost. And the second thing is you won't get the pleasure of shopping. Suppose if you want to buy a pin then go to shop that are selling only pins. Don't go to shop which are selling pickles with pins.

Some of the shopping areas which I prefer to shop is General bazaar, Sultan bazaar, Begum bazaar, Chudi bazaar,.. all are in HYD. Pondy bazaar in CHN, Sarojini Marg in Delhi, MG road in BLR. I recommend my blog readers to visit these places and shop.


Generally the apt time for shopping is between 11 AM to 4 PM in the evening After my great research in shopping technology I am suggesting this time because the shopkeepers mentality in this time is to undergo any beram (bargain).


Always take a bottle of orange juice or glucose which helps to gain good energy while shopping. Wear convenient dress.

Don't take your husband or children for shopping. After finishing your major shopping you can buy some of the minor items like tooth brush for your husband and pencils for kids.


Allotment of time in shopping is very important. Suppose if your total shopping time is 4 hours.. spend 3 hours in major shopping... 58 minutes in window shopping and 2 mins in minor shopping like the ones that I mentioned above.


Always try to collect the visiting card from shops which may help you to get deals next time. Keep all the bills safely.


POST SHOPPING CARE:

This is the very important thing which make u to escape from husband's archanai after coming home. After returning from shopping have a fresh bath and sometimes apply a face pack to give you a glowing look.Never show the shopping tiredness in your face. Never tell your husband. 

I wrote this in 2009 and saved it in Drafts, hoping I would add more later. Then apparently I forgot. Today I realized that this was still in my Drafts and publishing now as it is. Thanks  friends for reading. 

Friday, July 5, 2019

ஆவக்காய்.....காரமும் ஓர் அன்பு

அது 2001 வருடத்தின்பிற் பகுதி. கணவரின் வேலை நிமித்தமாக கைக்குழந்தையுடன் ஹைதராபாத் நகருக்கு ஒரு அப்பார்ட்மென்டில் குடிவந்தோம். கலாச்சாரம் புதிது..புரிந்தும் புரியாத மொழி..நாங்கள் குடியேறிய குடியுருப்பு கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்று கொள்கை கொண்டிருந்தது.

அது ஒரு இனிய வெயில் காலத்தின்  துவக்கம். எங்கள் குடியிருப்பில் ஆவக்காய் போடுவது என்று முடிவு செய்தார்கள்...
மாங்கனிக்கு பெயர் போன ஊரிலிருந்து வந்ததால் எனக்கும் ஆவக்காய் மீது ஆவல்..எல்லோரும்    கூடினார்கள்..வாங்கி வெட்டி என்ற சொற்களை பயன்படுத்தினார்கள். இவர்கள் பேச்சில் ஆவக்காய் சைவமா என்று சந்தேகம்.."ஆடு தொடா" சுத்த சைவம் நான். பக்கத்தில் இருப்பவரிடம் சற்றே நெளிந்து விளக்கம் கேட்டேன். தெலுங்கில் ஆவாலு என்றால்

கடுகு. மாங்காயுடன் கடுகு பொடி சேர்ப்பது என்ற விளக்கம் பெற்றேன்.

கூடிய கூட்டத்தைப்பார்த்தால் முன் அனுபவம் இருந்தால் தான் கூட்டணியில் இடம் கிடைக்கும் என நினைத்தேன்.
எங்கள் வீட்டில் மாவடு ஊறுகாய் போடும் வரலாற்றை கூறி என் தாத்தா மாவடு போடுவதில் வடு காணா வல்லவர் என்று ஆர்வமாக சொன்னேன். என்னையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டார்கள்.
கோஷ்டிப்பூசல் இல்லாத அணி என்பதால் கூட்டணிக்கு அனுபவம் மிகுந்த பெண்மணி ஒருமனதாக தலைவரானார்.

எவ்வளவு கிலோ காய்,காரம்,வாங்கும் இடம் அவ்வளவு நேர்த்தியாக எழுதப்பட்டது. இந்த  இடம் பொருள் ஏவல்..இதை நானும் குறித்துக்கொண்டேன்.
என் குழந்தையைப்பார்த்துக்கொள்ள இரண்டு பெண்கள் ஆர்வமாக வந்தார்கள்..அவர்களுக்கு "பேபி சிட்டிங்" கைவந்த கலை என்றார்கள்.

நானும் கூட்டணியில் ஐக்கியமாகி கிளம்பி விட்டேன்..
எல்லோரும் சேர்ந்து சென்றதால் ஷேர் ஆட்டோ ஓர் ஆட்டோ ஆகியிருந்தது.

கடைவீதிக்கு சென்ற பிறகு தான்  தெரிந்தது..எங்களை போல் நிறைய பேர் வண்டி கட்டி வந்திருந்தார்கள்.
அப்போதுதான் மூட்டைகளில் மாங்காய் இறக்கிக்கொண்டிருந்தார்கள். தரம் பிரித்து தேர்ந்தெடுத்து ஒரே அளவாக வெட்டி தர வேண்டும் என விற்பவர்க்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. என் தகுதிகேற்ப மேற்பார்வை பணி வழங்கப்பட்டது. காய் வாங்கிய பின் அவற்றிற்கேற்ப இடு பொருட்கள் வாங்கப்பட்டது. எங்கள் வணிக நேரம் 5 மணிநேரம் நீடித்தது.

ஆவக்காய் மோகத்தில் மதிய சாப்பாட்டை மறந்திருந்தேன். வீட்டிற்கு வந்ததும் தான் நினைவுக்கு வந்தது. என் குழந்தை நன்றாக விளையாடி உண்டு  உறங்கியிருந்தாள்.இவளுக்கு "ஆவக்காய் பிராசனம்" செய்ய வேண்டும்..மதிய உணவு அனைவருக்கும் பொதுவாக பரிமாறப்பட்டது..
சிறிது நேரம் ஓய்வுக்குப்பின் மீண்டும் மாலையில் அனைவரும் ஆஜர்..

அபார்ட்மென்ட் பெரிய வராண்டாவில் அனைத்தும் கொட்டி சுத்தம் செய்யப்பட்டது. மாங்காய் துண்டுகளை சுத்தமான துண்டினால் துடைக்க சொன்னார்கள். அடிப்படை விதி ஒன்று.."காரமும் ஈரமும் "சேரக்கூடாது. எல்லோரும் செய்ததால் விரைவில் முடிந்தது.
பிறகு முக்கியமான பகுதி எல்லாவற்றையும் பக்குவமாக கலக்கவேண்டும். பெரிய அன்னக்கூடைகள் ஆவக்காய் கூடைகளாக மாறியிருந்தன.
அனுபவமிக்க கை அனைத்து இடு பொருட்களும் இட்டு கலக்க தயாராக இருந்தார்.
ஊறுகாய் கலப்பதற்கு வேறு கை கூடாது என்ற விதி அமலுக்கு வந்தது. பக்குவமாக
கலந்து வைத்த அனைத்தும்
அருமையாக காற்று புகாதவாறு துணியினால் கட்டப்பட்டது..
அடுத்த நாள் காலை மீண்டும் வரவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்கள்..கனவில் ஆவக்காய் ஆவியாவது போல் வந்தது.
அடுத்த நாள் காலை ஆறுபேர் கொண்ட குழு ஒன்று வந்தது. பெரிய எடை கருவி  மற்றும் பல டப்பாக்கள் பைகள் கொண்டு வந்து இருந்தனர். ஊறுகாய் பாக்கிங் செய்து கூரியர் மூலம் அனுப்புபவர்கள்..
பெரும்பாலனவர்கள் வீட்டில் வெளிநாட்டில் வேலை செய்யும் மகன்கள் மகள்கள் உற்றார் உறவினர்கள் இருந்தார்கள். இவர்களுடைய லிஸ்ட் அச்சடித்து இருந்தது. இரவு ஷிப்டில் இந்த ஸ்லீப்பர் செல் வேலையை செய்து இருந்தார்கள்.
முதலில் நாடு வாரியாக மாகாணம் வாரியாக பிரித்து அத்தனையும் பாக்கிங் செய்து அத்துடன் இணைப்பு பொடிகள் அழகான இணைப்புடன் தயாராகியது. எனக்கு ஒரு வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்வது போல் உணர்வு. அன்னக்கூடைகள் காலியாக தொடங்கியது.

பாரதி இருந்திருந்தால் "அந்நிய நாட்டிற்கு ஆவக்காய் அனுப்பி ஓர் மென்பொருள் மாறுகொள்வோம்'' என்று எழுதியிருப்பார்.

வெளிநாட்டு பிரிப்பு முடிந்ததும் உள்குடியிருப்பு பிரிப்பு துவங்கியது. வலுவான கூட்டணி என்பதால் பிரிப்பதில் எந்த சச்சரவும் இல்லை. எனக்கு தேவைக்கு அதிகமாகவே கொடுத்தார்கள். இலவச இணைப்பாக பருப்பு பொடியும் கொடுத்தார்கள். மீண்டும் சாப்பிட கூப்பிட்டார்கள். நேரம் தவறாமல் சாப்பிட கூப்பிட்டது சந்தோஷமாக இருந்தது.

இந்த மெனுவில் ஊறுகாய் சாதம் பருப்பு பொடி நெய் அனைத்தும் இணைந்து...அனைவருக்கும் ஒருவரே சாதம் பிசைந்து கையில் ஊட்டி வயிறார உண்ண சொன்னார்..
ஆவக்காய் காரம்..கண்ணிலிருந்து காரக்கண்ணீர் அவர்கள் காட்டிய அன்பில் ஆனந்த கண்ணீராக உருகியது..

ஆம்..உணவு ஓர் உணர்வு

அன்புடன்

நா.பிரசன்ன லக்ஷ்மி

Friday, July 16, 2010

THE GIFT OF MAGI

Certainly this is not about Bible story ...
Ther are some gifts which we get for our b day or for some occasions which carry certain formal words such as ''Best wishes''...but I got some gifts from the peoplewho really wished Best for me...
These unwrapped gifts cherish my mind whenever i think about it.....
In my fourth standard I GOT A BEAUTIFUL BOOK from my father's friend Charles uncle....It was a very small bound book which had some collections of plants animals etc...the bond cover was very attractive with some beautiful stars on it...I m still keeping that book with me bcos that was the first thing which I got from somebody in the namo of ''GIFT'
My thatha gave me a gift a oxford dictionary when I was in my 8th standard...the moment was very cherishable b cos my thatha gave it to me with a great suspense... he enquired a lot about the book shopb cos we were new to Salem at that time..I m still using it and see my 'thatha ' s sign on that dictionary
Another valuble gift and lovable gift was from my sugu chithappa....that was also in my 8th std... he got me a beautiful watch(that was the costlier gift i gotin that age)the white dialled hexagon shape watch with golden colour strap
The watch was in my hands for almost 13 yrs...I m stillkeeping that watch and trying to change its battery...
During my college days..my cousin Ravi ccame to salem... at that time he gave me a steel plate which costed 35 rs..and asked me to use that daily...my chemistry with that plate goes on welll and still using that...
My husband always tells ''Naane unakku gift dhan... pls dont ask any gifts'' (most husbb says same dialogue to their wife)but once gave me a beautiful hand bagg...a leather bag which is ideal bag for ladies but unfortunately that was the only giift I missed in one road accident...
Mort than the gifts the feeling of the person who gifted us speaks to us whenrver we see or think of that gifts....like the Gift of MAGI